பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்த கே.ஜே.யேசுதாஸ்

14-11-2016
திங்கள்கிழமை (Monday)


கே.ஜே.ஏசுதாஸ்

தேனினும் இனிமையான குரலில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி உலகமெங்கும் இருக்கும் இசை ரசிகர்களின் மனதை பறித்த காந்தர்வ குரலுக்கு சொந்தக்காரரான திரு. கே.ஜே.ஏசுதாஸ், இன்று பாடகராக 55 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

1961ஆம் ஆண்டு, இதே நாள் (நவம்பர் 14 1961) ஜாதி பேதம் மாதா துவேஷம் என்ற பாடலை இசையமைப்பாளர் M.B. Srinivasan  இசையில், திரு. கே.ஜே.ஏசுதாஸ் பதிவு செய்து தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.  அன்று முதல் இன்று வரை, அஸ்ஸாம், கொங்கனி மற்றும் காஷ்மீரி மொழிகள் தவிர, இந்தியாவில் உள்ள ஏனைய மொழிகளிலும் மற்றும் ஒரு சில வெளிநாட்டு மொழிகளிலும் சேர்த்து 40,000 பாடல்களை பாடியுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாஸ், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பிலிம்பேர் விருது 5 முறையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளை 43 முறையும் பெற்றுள்ளார்.

திரு. கே.ஜே.ஏசுதாசுக்கு 1975ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்படங்களில் ஏறத்தாழ அவர் பாடிய அனைத்துப்பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. “பொம்மை” திரைப்படத்தில் இடம் பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலில் தொடங்கி, “அபூர்வராகங்கள்” படத்தில் பாடிய அதிசய ராகம் ஆனந்த ராகம் மற்றும் “சிந்துபைரவி” படத்தில் பாடிய  அனைத்துப் பாடல்கள்  என்று அடுக்கிக்கொண்டே போகலாம். திரு.கே.ஜே.எசுதாஸ் பாடிய சில தமிழ்த்திரைப்பட பாடல்களை கீழே காணலாம்.

   1. பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்        -  மீனவநண்பன்
   2. அந்தமானைப் பாருங்கள் அழகு     -  அந்தமான் காதலி
   3. உன்னைத்தானே தஞ்சம் என்று     -  நல்லவனுக்கு நல்லவன்
   4. கண்ணே கலைமானே              -  மூன்றாம்பிறை  
   5. தூங்காத விழிகள் ஒன்று           -  அக்னிநட்சத்திரம்
   6. அகரம் இப்போ சிகரமாச்சு          -  சிகரம்
   7. மலரே குறிஞ்சி மலரே             -  டாக்டர் சிவா
   8. தென்றல் வந்து என்னைத்தொடும்  -  தென்றலே என்னைத்தொடு
   9. மூக்குத்தி பூ மேலே               -  மௌனகீதங்கள்
  10. அதிகாலை சுபவேளை             -  நட்பு

  திரு. கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் இசைப்பயணம் தொடரட்டும்.
  












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக