சங்கீத உலகின் பீஷ்மர் எம். பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

22/11/2016

செவ்வாய்க்கிழமை (Tuesday)



06-07-1930 - 22-11-2016


சங்கீத உலகின் பீஷ்மர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.. அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கீத கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். பத்ம விபூஷண் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். பக்த ப்ரகலதா என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்திருப்பார். 

அவருக்கு கர்நாடக இசைதான் பிரதானம் என்றாலும் அவர் திரைப்படத்தில் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான். 


   01)  பாண்டவர் வனவாசம் (தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது)  
   02)   திருவிளையாடல்           
   03)   நூல்வேலி                        
   04)  கலைக்கோயில்                
   05)  கவிக்குயில்                                          
   06)  சாது மிரண்டால்
   07)  சுப தினம்
   08)  கண்மலர்
   09)  உயர்ந்தவர்கள்
   10)  குமார சம்பவம்
   11)  வடைமாலை
   12)  தெய்வத்திருமணங்கள்
   13)  மிருதங்கசக்ரவர்த்தி
   14)  இசை பாடும் தென்றல்
   15)  மகாசக்தி மாரியம்மன்
   16)  திசை மாறிய பறவைகள்
   17)  நவரத்தினம் 
   18)  பசங்க


நண்பரும் "மிருதங்கசக்ரவர்த்தி" படத்தின் தயாரிப்பாளருமான திரு. கலைஞானத்திடம் அப்படத்தில் திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டேன்.  உடனே, தாராளமாக என்று சொல்லி தொடர்ந்தார், படத்தில் சிவாஜிக்கும் நம்பியாருக்கும் இசைப் போட்டி, சிவாஜி மிருதங்கம் வாசிப்பார்,  நம்பியார் பாடுவார். சிவாஜிக்கு மிருதங்கம் வாசித்தவர் உமையாள்புரம் கே. சிவராமன், நம்பியாருக்கு பாடியவர் மறைந்த பாலமுரளி கிருஷ்ணா. கதைப்படி, நம்பியார் தோற்க வேண்டும், அப்படியென்றால், பாலமுரளி தோற்குமாறு பாடவேண்டும். இதை பாலமுரளி கிருஷ்ணாவிடம் எப்படி சொல்வது என்ற பயம், ஏனென்றால், பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சங்கீத வித்வான். ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இருந்த அனைவருமே பயந்தோம். ஆனால் அவர், பாடவேண்டிய வரிகளை படித்துப் பார்த்தார். சிரித்துக்கொண்டே, போட்டியில் தோற்குமாறு பாட வேண்டும் அவ்வளவுதானே என்று ஒரே டேக்கில் பாடிக்கொடுத்தார். மிகப்பெரிய பெருந்தன்மையான மனிதர் என்று சொல்லி முடித்தார் திரு. கலைஞானம்.

இந்த நேரத்தில் மறைந்த இசையமைப்பாளர்  எம்.எஸ்.வி அவர்கள் சொன்ன " இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்" என்ற வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது. பாலமுரளி கிருஷ்ணா இவ்வுவுலகை விட்டு மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற இசைச் செல்வம் என்றும் மறையாது.

அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 



மேற்ச்சொன்ன படங்களின் பெயர்களை தந்து உதவியவர் கவிஞர் பொன். செல்லமுத்து.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக