வானொலி உரையாடலுக்கு ஒப்பனை செய்து கொண்ட இருபெரும் ஜாம்பவான்கள்

14/10/2016
Firday (வெள்ளிக்கிழமை)

                 திரு.எம்.எஸ். உதயமூர்த்தி                                                     முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்


சென்னையில் நேற்று  நடைபெற்ற இலக்கிய விழாவில் தலைமையேற்று பேசிய முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கு நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்வை பேசும்போது குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு "நம் டீவி" என்ற தொலைக்காட்சி இருந்தது.  அதில் ஒய்வு பெற்ற வானொலி இயக்குநர் திரு. விஜய திருவேங்கடம் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அந்த தொலைக்காட்சிக்கு டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை நேர்காணல் செய்வதற்காக முனைவர் திருப்பூர் கிருஷ்ணனை திரு.விஜய திருவேங்கடம் அழைத்தார். முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் சென்றார். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும் முனைவர் திருப்பூர் கிருஷ்ணனும் பரஸ்பரம் விசாரித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். 5 நிமிடம் சென்றது, அவர்களைச் சுற்றி ஒளிப்பதிவு செய்வவதற்கு தேவையான காமிராக்கள் எதுவும் இல்லை. 10 நிமிடங்கள் சென்றது. நிலைமை மாறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் தங்களுக்கு ஒப்பனை செய்துவிட யாரும் வரவில்லையே என்று ஒருத்தொருக்கொருத்தார் விசாரித்துக்கொண்டார்கள்.  சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் இருவரும் ஒய்வறை எங்கே இருக்கிறது என்று விசாரித்து, அங்கு சென்று, அவர்களாகவே தங்களை ஒப்பனை செய்துகொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து அமர்ந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த திரு. விஜய திருவேங்கடம், மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், 6 மாதங்கள் கழித்துதான் நிகழ்சிகளை வீடியோ பதிவு செய்ய இருக்கிறோம் என்று சொன்னார். இதில் நகைச்சுவை என்னவென்றால், இருபெரும் ஜாம்பவான்களும், இது ஒரு ஆடியோ நேர்காணல்தான், தொலைக்காட்சிக்கான நேர்காணல் அல்ல  என்று தெரியாமலேயே சுயமாக ஒப்பனை செய்துகொண்டார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக