கர்நாடகா போலிஸ் இசைக்குழுவின் மயக்கவைக்கும் இசை (Karnataka Police Band to mesmerize )

05-10-2016
Wednesday (புதன்கிழமை)

கர்நாடகா போலிஸ் இசைக்குழுவைச் சேர்ந்த 500 இசைக்கலைஞர்கள், வியாழக்கிழமையன்று (06-10-2016) மைசூருவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள மைசூரு அரண்மனை முன்பு  பல்வேறு பாடல்களை வாசிக்க உள்ளனர். 

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, குறிப்பாக மைசூருவில் நடைபெற்றுவரும் நவராத்திரி எனும் தசரா பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். விழாவின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள போலிஸ் இசைக்குழுவில் வாசிக்கும் அனைத்து கலைஞர்களையும் ஒன்று திரட்டி வருகின்ற வியாழக்கிழமையன்று ஒரே நேரத்தில் அத்துனை கலைஞர்களையும் வாசிக்க வைக்க உள்ளனர். 

இந்த இசையில் கர்நாடக சங்கீத பாடல்கள், ஹிந்துஸ்தானி பாடல்கள் முதலியவற்றை இசைக்க உள்ளனர். 

வந்தே மாதரம் பாடலை கர்நாடகா போலிஸில் உள்ளள ஆங்கில இசைக்குழு வாசிக்க உள்ளது.  

நிகழ்ச்சியின் நிறைவாக  "சாரே ஜஹான்சே அச்சா (Saare Jahanse Accha) என்ற பாடலை வாசிக்க உள்ளனர். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக