ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனுக்கு டிஸ்கோ பாடல்கள் பிடிக்குமா?

August 2 2016

இந்திய திரை இசை உலகில் எஸ்.டி. பர்மன்(தந்தை) மற்றும் ஆர்.டி. பர்மன் (மகன்) என்று சொன்னால் தெரியாதவர்கள் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, ஹிந்தி திரை இசை உலகில் கொடி கட்டி பறந்தார்கள். இருவருமே இன்று உயிரோடு இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் கூட, மொழி தெரியாவிட்டாலும், ஹிந்தி திரைப்பட பாடல்களை, குறிப்பாக அதன் இசையை ரசித்தார்கள். அப்படிபட்ட இசையை தந்தவர்களுள் ஆர்.டி. பர்மன் குறிப்பிடதக்கவர்.

ஆர்.டி.பர்மனைப் பற்றி "ஆர்.டி.பர்மானியா" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் வெளி வந்துள்ளது. இப்புத்தகத்தை மும்பையில் உள்ள முது பெரும் பத்திரிக்கையாளர் திரு. சைதன்ய படுகோனே எழுதியுள்ளார். 

ஆர்.டி.பர்மனுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? ஆர்.டி.பர்மன் ஒரு முறை திரு. சைதன்யா வீட்டில் உள்ள தொலைபேசியில் அழைத்துள்ளார். போனை எடுத்தவர் சைதன்யாவின் அப்பா,  அப்பாவிடம் ஆர்.டி.பர்மன் என்ன? சொன்னார் என்பதையெல்லாம் அப்புத்தகத்தில் சொல்லியுள்ளார். 

இசையமப்பாளராக அறிமுகமானதிலிருந்து, 20 தடவை பிலிம் ஃபேர் விருதுக்கு அவர் இசையமைத்த படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இருபது வருடங்கள் கழித்துதான் அவர் இசையமத்த "சனம் தேரி கசம்' (Sanam Teri Kasam) என்ற ஹிந்தி படத்திற்கு கிடைத்தது.  இரண்டாவதாக 'மசூம்' (Masoom) என்ற படத்திற்கு கிடைத்தது.  ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கிடைக்காமல் போன ஃபிலிம் பேர் விருது "சனம் தேரி கசம்" படத்திற்கு கிடைத்த போது ஆர்.டி.பர்மன் சந்தோஷமடையவில்லை. ஏனென்றால், அந்தப் படத்தில் எல்லாப் பாடல்கமே மேற்கத்திய இசையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால், 'மசூம்' படத்திற்கு பிலிம் ஃபேர் விருது கிடைத்த போது ஆர்.டி.பர்மனுக்கு அளவற்ற மகிழ்ச்சியில் இருந்தார் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இதோ அந்தப் பாட்டு



மேலும், இந்தப் பாட்டை பாடிய ஆர்த்தி முகர்ஜிக்கு, 1983ஆம் ஆண்டிற்கான , சிறந்த பாடகிக்கான 31வது பிலிம் ஃபேர் விருதும் மற்றும் சிறந்த பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்தது. (ஆர்.டி. பர்மனை பற்றிய மேலும் பல  சுவாரஸ்யமான தகவல்கள் நாளை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக