நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் சாதக மந்திரம்

18 August 2016
டி.என். ராஜரத்தினம்  பிள்ளை

நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என். ராஜரத்திதினம் பிள்ளையின் 119வது பிறந்த நாள் இந்த மாதம் 27ஆம் தேதி ஆகும். அவரைப் பற்றி விரிவாக அவரது பிறந்த நாளன்று சில தகவல்களை பதிவு செய்ய உள்ளோம்.  அதற்கு முன்னோட்டமாக ஒரே ஒரு தகவலை மட்டும் இன்று பதிவு செய்வோம். நாதஸ்வர சக்ரவர்த்தி, வயதான காலத்தில் கூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து சாதகம் செய்வாராம். 'இந்த வயதிலும் இது தேவையா? என்று கேட்ட போது, 'தேவைதான், ஒரு நாள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் சின்ன சின்ன குறைபாடுகள் எனக்கே தெரியும்.  இரண்டு நாள் சாதகம் செய்யவில்லை என்றால்,  என்னைப் போன்ற விதவான்களுக்கு தெரியும். மூன்று நாட்கள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் விஷயம் புரிந்து ரசிகர்களுக்கு அது தெரிந்துவிடும்.  கலைஞன் என்பவன் தினமும் சாதகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றாராம். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு வழி காட்டுதல் ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக