கிராமி விருதுக்கு செல்லும் காயத்ரி மந்திரம்

6 August 2016

பப்பி லஹரி

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் திரு. பப்பி லஹரி, 1980 மற்றும் 90களில், தனது இசையால் ஹிந்தி திரைப்பட உலகத்தை கோலோச்சியவர். 'தாய் வீடு' மற்றும் 'பாடும் வானம்பாடி' போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமையத்தவர். 'கருப்பம்பட்டி' என்ற தமிழ் படத்தில் கண்ணன் இசையில் ஒரு பாட்டு பாடியுள்ளார், தொடர்ந்து பல மொழிகளில், திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இது தவிர தனிப் பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டு வருகிறார்.  சமீபத்தில், சமஸ்கிருதத்தில் இருக்கும் காயத்ரி மந்திர ஸ்லோகத்திற்கும் மற்றும் புத்த ஸ்லோகத்திற்கும் இசையமைத்துள்ளார். பப்பி லஹரி இசையில் வெளிவந்துள்ள இந்த தனி ஆல்பத்தை கிராமி விருது தேர்வுக்குழுவுக்கு அனுப்ப உள்ளார். கிராமி விருதுக்கு ஏன்? அனுப்பப்படுகிறது என்பதற்கு லஹரி சொல்லும் காரணம், வெளிநடுகளில் இந்த மாதிரியான சான்டிங் (chanting) ஆல்பத்தை பெரிதும் விரும்புகிறார்கள், உதாரணத்திற்கு உலகின் நம்பர் 1 பாப் பாடகரான டினா டர்னர் (Tina Turner)  "ஸர்வேஸாம் ஸ்வஸ்டிர் பவது' என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியுபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளளது என்கிறார் பப்பி லஹரி.

சமீபத்தில்,பப்பி லஹரி தயாரித்த 'Slum Stars' (ஸ்லம் ஸ்டார்ஸ்) என்ற குறும் பாடம் சர்வதேச சினிமா விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளது. 

பப்பி லஹரி,காயத்ரி மந்திர இசையமைப்பை கிராமிய விருதுக்கு அனுப்பட்டும் வாழ்த்துகள். அது ஒருபுறம் இருக்க டினா டர்னர் (Tina Turner) பாடிய ஸர்வேஸாம் பாடலை கேளுங்கள்.  புகழ்பெற்ற ஆங்கிலப் பாடகியான டினா டர்னர் (Tina Turner) நமது நாட்டின் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் இருக்கும் ஒரு பாடலை மிக அருமையாக பாடியுள்ளார். ஆனால், இந்தியர்களாகிய நம்மில் ஒரு சாரார்,அழிந்து வரும் சம்ஸ்கிருதத்தை படிக்கவே கூடாது என்று அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, அழிந்து வரும் சமஸ்கிருத மொழியை வேறோரு நாட்டினர் வளர்க்கின்றனரே அது வரைக்கும் மகிழ்ச்சி. இப்போது அந்தப் பாடலை கேளுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக