13 August 2016
பொதுவாக, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களிடம், இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் மாற்று மொழியில் ஹிட்டான பாடல்கள் மாதிரியே வேணும் என்று சொல்வார்கள். இசையமைப்பாளர்களும் அந்தப் பாடல் மாதிரியோ அல்லது அந்த பாடலின் சாயல் வராத அளவிற்கோ பாடலுக்கு இசையமைத்துக் கொடுப்பார்கள்.
அந்த வகையில் கீழே உள்ள ஹிந்திப் பாடல்களையும் அதற்கு சமமான தமிழ்ப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள்.
முதலாவதாக கேட்ட ஹிந்திப் பாடல் "Aa Gale Lag Jaa" என்ற ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற பாடல். இந்தப் படம் 1971ஆம் ஆண்டு வெளிவந்தது. ஹிந்திக் கதையை தமிழில் எடுப்பதற்காக, தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மறைந்த
வி.பி. ராஜேந்திர பிரசாத், அந்த கதையின் உரிமையை வாங்கி தமிழில் "உத்தமன்" என்ற பெயரில் படமாக்கினார். இந்தப் படத்தில் சிவாஜி, மஞ்சுளா, பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கான வசனத்தை திரு. பாலமுருகன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சம்மந்தமாக திரு. பாலமுருகனிடம் கேட்ட போது, பாடல் கம்போசிங் நடந்த போது, இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் ஹிந்திப் பாடல்கள் முழுவதையும் கேட்டார். குறிப்பிட்ட "கேளாய் மகனே" பாடலின் ஹிந்தி இசையமப்பு மிகவும் பிடித்திருந்தது. உடனே கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து, உடனே பாடல் வரிகள் தர முடியுமா எனக்கேட்டார், உடனே கவிஞரும், தாமதமில்லாமல் பாடல் வரிகளை கொடுத்தார். அனைத்து வரிகளும் தத்துவமாக இருந்ததாலும் இசைக்கு பொருந்தியதாலும், ஹிந்தி இசையை அப்படியே வைத்துக் கொண்டோம் என்றார் திரு. பாலமுருகன். அது சரி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மறைந்த வி.பி. ராஜேந்திர பிரசாத் யார் எனத் தெரியுமா? தற்போதய தெலுங்கு முண்ணனி நடிகரும் லிங்கா படத்தில் வில்லனுமான திரு. ஜெகபதி பாபுவின் தந்தையாவார். தமிழில் உத்தமன், பட்டாகத்தி பைரவன் மற்றும் எங்கள் தங்க ராஜா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக