மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்

10-09-2016
Saturday (சனிக்கிழமை)

திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி


கர்நாடக இசை மேதை மறைந்த திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மியின் நூற்றாண்டு விழா, கடந்த ஆண்டு மும்பை, ஷண்முகாநந்தா ஹாலில் தொடங்கிய நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தொடங்கும் ஒரு வாரகால கொண்டாட்டங்களோடு நூற்றாண்டு விழா நிறைவு பெறுகிறது. டாக்டர். திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி விருதுகள், இந்தியாவின், மதிக்கதக்க ஏழு (7) பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அவர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்களான, கிரிஜா தேவி, கிஷோரி அமோன்கர், அருணா சாய்ராம், விசாகா ஹரி, பரத நாட்டிய கலைஞர்கள், யாமினி கிருஷ்ணமூர்த்தி, வைஜெயந்திமாலா மற்றும் பாண்டவானி கலைஞர் தீஜன் பாய்.

இவ்விழாவில், திருமதி. எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய பிரபல பாடல்களுக்கு 100 பரதநாட்டிய கலைஞர்கள் நாட்டியமாட உள்ளனர். திருமதி. எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட உள்ளது.


மேலும், இந்தாண்டுக்கான “சங்கீத ப்ராச்சாரியா” விருது கடம் கலைஞரும் கிராமி விருது பெற்றவருமான விக்கு விநாயகராமிற்கு வருகின்ற 14ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இம்மாதம் 18ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, பேகம் பர்வீன் சுல்தானா மற்றும் பரத் கே. சுந்தரின் கச்சேரியோடு விழா நிறைவு பெறுகிறது. மும்பையில் எம்.எஸ் அம்மாவின் நூற்றாண்டு விழா துவக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக