ஏ.ஆர். ரகுமான் பாடல்களை பாடும் பெர்க்லி மியுசிக் காலேஜ் மாணவர்கள்

04-09-2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெர்க்லி காலேஜ் ஆப் மீயுசிக் என்ற பெயரில் இசைக்கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில் படித்த பழைய மாணவியான கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அன்னட்டி ஃபிலிப் (Annette Philip) என்பவர் Berklee Indian Ensemble  என்ற இசைக்குழுவை உருவாக்கி, அக்குழுவின் இயக்குநராக இருந்து வருகிறார். இக்குழுவினர் இந்திய இசையில் உருவான பாடல்களை பாடிவருகிறார்கள். அந்த வகையில் முதன் முதலாக இந்தியாவில் அதுவும் பெங்களூருவில் நடக்க உள்ள 54வது கணேஷ் உத்சவ் விழாவில், வருகின்ற 6ஆம் தேதி,  ஏ.ஆர். ரகுமான் பாடல்களை பாட உள்ளார்கள். பெங்களூருவிற்கு வந்துள்ள இந்த இசைக்குழுவில் ஒரு சில இந்திய வம்சாவழியினரைத் தவிர மற்ற அனைவரும்  வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.


சாம்பிளுக்காக இந்தக் குழுவினர் பாடிய பாடல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக