இரு கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு கல்கி விருது (Two Carnatic Musicians receive Kalki award)

10-09-2016
Saturday (சனிக்கிழமை)


கல்கி விருது பெறும் திரு.அஸ்வத் நாராயணன் மற்றும் வயலின் இசைக் கலைஞர் சாருமதி ரகுராமன்

அமரர் கல்கி பிறந்தநாள் விழா, கல்கி நினைவு விருது வழங்கும் விழா கல்கி நினைவு அறக்கட்டளை சார்பில், மயிலாப்பூர் ராகசுதா ஹாலில் நேற்று நடைபெற்றது.

விழாவில், கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் அஸ்வத் நாராயணன் மற்றும் வயலின் இசைக்கலைஞர் சாருமதி ரகுராமன் ஆகியோருக்கு கல்கி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விருதினைப் பெற்ற அஸ்வத் நாராயணன் பேசுகையில், “இந்த விருதினைப் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளதாக உணர்கிறேன்,” என்றார்.

சாருமதி பேசுகையில் “இந்த விருது நிச்சயம் என்னை ஊக்கப்படுத்தும். கர்நாடக இசையில் என்னை ஊக்கப்படுத்திய என் பெற்றோர், குருவிற்கு நன்றி கூறுகிறேன்”, என்றார்.

விழாவின் நிறைவாக, விருது பெற்ற அஸ்வத் நாராயணன், சாருமதியின் இசைக் கச்சேரி நடைபெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக