அண்ணாசாமியின் கீர்த்தனைகள்

25/06/2016
Sunday (ஞாயிற்றுக்கிழமை)

அண்ணாசாமி சாஸ்திரி, கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸியாமா சாஸ்திரிகளின் பேரன் ஆவார். பஞ்சு சாஸ்திரியின் மகன், இயற்பெயர் "சியாம கிருஷ்ணா" அண்ணா என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். தந்தையாரிடம் காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம், சங்கீதம் முதலியவகளை கற்றுத் தேர்ந்தார்.  சிறந்த வர்ணங்கள் மற்றும் கிருதிகளை சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் எழுதியுள்ளார். இவர்களுடைய கிருதிகளில் புகழ் பெற்றவை சில

                 ஸ்ரீ காஞ்சி நகரா நாயகி - அசாவேசி ராகம் - ஆதி தாளம்
                 பரமபாவனி - அடானா ராகம் - ஆதி தாளம்
                 ஸ்ரீமகாரஞ்சலி - பிலஹரி ராகம் 
                 ஸ்ரீகாமாட்சி - சாரங்கா - ஆதி தாளம்

இவருடைய நெருங்கிய நண்பர் வீணை குப்பய்யர்.  இருவரும் அடிக்கடி சந்தித்து கடினமான கற்பனைச் சுரங்களை பாடி மகிழ்வதுண்டு. தமது 73வது வயதில் 17/02/1900 காலமானார். இவரது பல இசை பனுவல்கள் இவரது நுண்ணிய இசை புலமைக்கு எடுத்துக்காட்டாகும்,



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக