July 15th 2016
விஞ்சமுரி வரதராஜ அய்யங்கார் பற்றிய ஒரு சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறோம்.
விஞ்சமுரி வரதராஜ அய்யங்கார் பற்றிய ஒரு சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறோம்.
01) 1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி செல்வச்
செழிப்பான
குடும்பத்தில் பிறந்தார்.
02) தனது 7வது வயதில் மைசூர் ஷேஷன்னா முன்னிலையில்
முதல் கச்சேரி செய்தார்.
03) டைகர் வரதாச்சாரி 1950ல் மறைந்தார், அவர் மறையும் வரை, அவரிடம் குருகுல வாசம் இருந்தார்.
04) ஹைதராபாத் ஆல் இந்திய ரேடியோவில் 8 வருடங்கள் பணியாற்றினார்.
அவர் பணியாற்றிய அந்த 8 வருடங்களில் கர்நாடக இசை முக்கியத்துவம் பெற்றது.
05) விஞ்சமுரி வரதராஜ அய்யங்காருக்கு ‘நடமாடும் இசைக் களஞ்சியம்’
(Walking encyclopedia of music) என்ற பெயரும் உண்டு.
06)
1943ல் அகில இந்திய வானொலி, சென்னை மூலம் ‘கான லகரி’ என்ற தலைப்பில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கர்நாடகம் சங்கீத வகுப்புகளை ஆரம்பித்தார்.
07)
முத்துசாமி, தீட்சதர், தியாகராஜர் மற்றும் கொவ்வூர் பஞ்சரத்தன கீர்த்தனைகளில் அரிய
கீர்த்தனைகளை எடுத்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்.
08) விஞ்சமுரி வரதராஜ அய்யங்கார் ஒரு சிறந்த நிர்வாகி, மியூசிக்காலாஜிஸ்ட், பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த இசையமப்பாளர்.
இப்படி பன்முகம் கொண்ட திறமையாளராக இருந்த விஞ்சமுரி வரதராஜ அய்யங்காரை, அன்னாரது 101வது பிறந்த நாளில் நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக