பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஆனந்த் பக்‌ஷியின் 87வது பிறந்த தினம் இன்று

July 21 2016


(இ-வ) இசையமப்பாளர் லக்‌ஷ்மிகாந்த், லதா மங்கேஷ்கர், பாடகர் கிஷோர் குமார், கவிஞர் ஆனந்த் பக்‌ஷி மற்றும் இசையமப்பாளர் பியர்லால்.

இன்று தமிழ்த் திரையுலகின் கருப்பு தினமாக இருந்தாலும், ஹிந்தி திரைப்பட உலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் ஆனந்த் பக்‌ஷியின் பிறந்த தினமும் இன்றுதான்.

ஆனந்த் பக்‌ஷி, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ராவல்பிண்டி நகரில் 1930ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ந் தேதி பிறந்தார்.

சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். பள்ளிப் படிப்பிற்கு பின்பு இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய  ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணி புரிந்தார். 

ராணுவத்தில் பணி புரிந்த காலத்தில் ஆனந்த் தன்னுடைய கவிதை தொகுப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்ட “சைனிக் சமாசார்” என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார்.

பாடல் எழுதுவதிலும், பாடுவதிலும்  தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக ஹிந்தி திரைப்பட உலகில் நுழைந்தார்.

1956ஆம் ஆண்டு 60 பாடல்களை எழுதிக் கொண்டு ஹிந்தி திரைப்பட உலகில் நுழைவதற்காக மும்பை வந்தார், ஆனால், அவர் முயற்சி பலிக்க வில்லை.

1958ஆம் ஆண்டு பிரிட்ஜ் மோகன் படமான “பால ஆத்மி” (Bhala Aadmi) என்ற ஹிந்திப் படத்தில் பாடல் மூலம் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது.

ஹிந்தி திரைப்பட உலகில் 3500 பாடலுக்கு மேல் எழுதிய கவிஞர்.

Mome Ki Gudiya” என்ற ஹிந்திப் படத்தில் முதன் முதலாக பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கருடன் இணைந்து டூயட் பாடலும் பாடியுள்ளார்.

ஆனந்த் பக்‌ஷி, லக்‌ஷ்மிகாந்த்-பியர்லால் என்ற இசையமைப்பாளருக்குதான் அதிக பாடல்கள் எழுதியுள்ளார்.

“ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” என்ற ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற “ தம் மேரே தம்” என்ற பாடலை எழுதியதின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

ஆனந்த் பக்‌ஷி 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி காலமானார். அவருடைய ஒரு சில பாடல்களை கீழே வீடியோவில் கொடுத்துள்ளோம். இந்தப் பாடல்களையெல்லாம் கேட்டவுடன் உங்களுடைய பழைய ஞாபகங்கள் வரும். இந்தப் பாடல்களையெல்லாம் ஆனந்த் பக்‌ஷிதான் எழுதியுள்ளாரா என்று ஆச்சரியத்துடன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வீர்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக