முபாரக் பேகம் பாடத் தயாராகிறார், உடன் இசைக் கலைஞர்கள்
முதுபெரும் ஹிந்தி பின்னணி பாடகி முபாரக் பேகம் கடந்த செவ்வாய்க் கிழமை
மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80, சிறிது காலம் உடல்நலமில்லாமல் இருந்தார்.
1936ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள சுஜன்கார் என்ற ஊரில் பிறந்த பேகம்
மும்பைக்கு வருவதற்கு முன் தன் இளமைப் பருவத்தை அகமதாபாத்தில் கழித்தார். ஊஷ்தத் ரியாஸுதின்
கான் மற்றும் சமத் கான் என்பவர்களிடம் பாடுவதற்கு பயிற்சி பெற்றார்.
1949ஆம் ஆண்டு நஸ்ஹாத் என்ற இசையமப்பாளரின்
இசையில் முதன் முதலாக ஹிந்தி திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். 1949-50களில் ஒரு சில
பாடல்களே பாடியிருந்தாலும், 1960கள் பேகத்திற்கு
ஒரு பொற்காலமாகும்.
சங்கர்-ஜெய்கிஷான், SD பர்மன் மற்றும் சலில் சௌத்ரி போன்ற
புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையில் பாட ஆரம்பித்தது, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
1980வரை பாடினார். அதன் பிறகு சில வருடங்கள் மேடைக் கச்சேரிகள் செய்தார். முபாரக் பேகம்
மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மறைவதில்லை. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக