July 16th 2016
தமிழ் இலக்கிய எழுத்தாளர் மறைந்த கு. அழகிரிசாமி இசையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை ஒரு நிகழ்வில் அவர் நிருபித்துள்ளார்.
ஒரு சமயம், மறைந்த டி.என். ராஜரத்னம் பிள்ளை, திருநெல்வேலி அருகில், நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, பிடாங்கு வெடி வெடித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தம், வாசிப்பிற்கு இடையூறாக இருந்ததால், வாசிப்பை நிறுத்தி விட்டார். இதை அறிந்த இளைஞர் கு. அழகிரிசாமி, வெடி வெடிப்பவரை மிரட்டி, நிறுத்த வைத்து, இசையை தொடர செய்தார். அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்.
பின்னாளில், இயல்பாகவே இசையறிவு உள்ள அவர் நாட்டுப்பாடல்களையும், காவடிச் சிந்தையும் தேடித் தேடி கேட்டு, அதற்கு இலக்கிய வடிவம் கொடுத்து எழுத்தாக்கி தொகுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக