தப்லா கலைஞர் லச்சு மகாராஜ் காலமானார் (World renowned Tabla Player Lachchu Maharaj Passes away)

July 30 2016


உலகப் புகழ் பெற்ற தபேலா (தப்லா) கலைஞர் திரு. லஷ்மிநாராயண் சிங் என்கிற லச்சு மகாராஜ் நேற்று முன் தினம் இரவு (புதன்கிழமை) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

லச்சு மகாராஜ் பற்றி, தம்பி, ராஜேந்திர பிரசாத் சிங் கூறும் போது, புதன் கிழமை, நெஞ்சு வலிப்பதாக கூறினார்.  உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றோம். டாக்டர்களும் சிகிச்சை அளித்தார்கள், ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு காலமானார்.

லச்சு மகாராஜ், தனது தந்தை வாசுதேவ சிங்கிடம், 10 வயதில் தபேலா கற்க ஆரம்பித்தார். தந்தையிடம் விரைவாகவும், கச்சிதமாகவும் கற்றுக் கொண்டார்.

தபேலா வாசிப்பில், அவருக்கென தனி பாணியை (Unique Style) உருவாக்கி அதில் (Perfection) கச்சிதத்தையும் சேர்த்ததனால், இசை ரசிகர்களுக்கு லச்சு மகாராஜவின் வாசிப்பு பிடிக்க ஆரம்பித்தது. இதனால், அவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.

பக்திக்கும் மற்றும் தத்துவத்திற்கும் புதிய டுயூன்களை (Tunes) உருவாக்கி, பல பயிற்சி நேரங்களில் வாசிக்க ஆரம்பித்தார்.

லச்சு மகாராஜாவிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று ஹிந்தி திரைப்பட இசை உலகில் தபேலா கலைஞர்களாக உள்ளனர்.

லச்சு மகாரஜாவுடன், சிதார் கலைஞர் அப்துல் ஹலிம் ஜாபர் கான் மற்றும் பரத நாட்டிய கலைஞர் லக்‌ஷ்மினி பானிகிரகியும் 40 நாட்களில் 27 நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் வழங்கியது மிகப் பெரிய சாதனையாகும்.

மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க முடிவெடுத்த போது, இசை ரசிகர்கள் கொடுக்கும் கௌரவத்தைதை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்ம விருது தேவையில்லை என்று கூறி வாங்க மறுத்து விட்ட மாபெரும் தன்மானக் கலைஞர் லச்சு மகாராஜ்.

அந்த தன்மானக் கலைஞர் இன்று உயிருடன் இல்லை.  ஆனால், அவருடைய தபேலா வாசிப்பு உலக இசை ரசிகர்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக