தூய்மை கங்கா பாடலைப் பாடிய திருச்சூர் ப்ரதர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர். ரகுமான்

July 12th 2016

தூய்மை கங்கா திட்டம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும்.
சென்ற வாரம் கங்கை நதி பாயும் பல்வேறு இடங்களில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 

இத்திட்டத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகும் வகையில் அதிகாரப்பூர்வ பாடல் (Official Anthem) உருவாக்கப்பட்டது. இப்பாடலுக்கு ஆதி சங்கரரின் கங்காஷ்டகத்திலிருந்து வரிகளை எடுத்து, அதற்கு இசை வடிவம் கொடுத்து பாடியுள்ளனர் கர்நாடக இசைப் பாடகர்கள் திருச்சூர் ப்ரதர்ஸ்.

இந்தப் பாடலைக் கேட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் திருச்சூர் ப்ரதர்ஸுக்கு தனது வாழ்த்தை டுவிட் செய்து தெரிவித்துள்ளார்.

இதோ அந்த நமாமி கங்கா பாடல்

ராகமாலிகா குழுவும் தனது வாழ்த்துகளை திருச்சூர் ப்ரதர்ஸுக்கு தெரிவித்துக் கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக