பிரபல மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன் பிறந்த தினம் இன்று

July 27 2016


                                             வித்வான் திரு. திருச்சி சங்கரன்

திருச்சி சங்கரன் 1942ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தார். இவர் தனது உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமனிடம் இசைப் பயிற்சியை தொடங்கினார். பிறகு பழனி சுப்பிரமணிய பிள்ளையிடம் மிருதங்கம் கற்றார். திருச்சிராப்பள்ளியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடிய நிகழ்ச்சியில் தனது 13 ஆம் வயதில் மிருதங்க வாசிப்பை அரங்கேற்றம் செய்தார்.

இவர், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர்களான செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்ரமணி அய்யர், மதுரை மணி அய்யர் மற்றும் செம்மங்குடி சீனிவாச அய்யர் ஆகியோருக்கு பக்கவாத்யம் வாசித்துள்ளார்.

இவர் தற்போது,கனடாவின் தலைநகர் டொரண்டோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருக்கிறார். இது தவிர, மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர், தன் இசை வாழ்வில் நடந்த சம்பவங்களில் இரண்டு சம்பவங்களை மறக்க முடியாதவைகளாக குறிப்பிடுகிறார்.

ஓன்று, ஒருமுறை மறைந்த திருமதி. எம்.எஸ் அம்மா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது வழியில் கனடாவின் டொராண்டோவில் இறங்கினார். அவரைப் பார்க்க திரு. சங்கரன் ஏர்போட்டிற்கு வந்திருந்தார். எம்.எஸ் அம்மாவை பார்த்தவுடன், எங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி எம்.எஸ். அம்மா சங்கரன் இல்லத்திற்கு விஜயம் செய்தார். அப்போது, சங்கரன், எம்.எஸ்ஸிடம், செம்மங்குடி சீனிவாசய்யர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு எம்.எஸ்., நன்றாக உள்ளார், ஆனால், உங்களை ரொம்ப miss பண்றார் என்று சொன்னவுடன், சங்கரன் கண்களில் கண்ணீர்.

இரண்டாவது, உடன்பிறவா சகோதரர் பி. ஏ. வெங்கட்ராமன், திருச்சியிலிருந்து, தில்லிக்கு அகில இந்திய வானொலியில் பணியாற்ற சென்றார். சில மாதங்கள் கழித்து,  சங்கரன் ஒரு முறை சகோதரரை பார்க்க சென்றார். வானொலியில், மிருதங்க வாசிப்பை ஒலிப்பதிவு செய்வதற்காக சங்கரனை கூட்டிச் சென்றார். அப்போது, பண்டிட் ரவி சங்கர், இசை நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்யும் இசை நடத்துனராக இருந்தார். ஒலிப்பதிவு முடிந்தவுடன், ரவி சங்கர், தனது இல்லத்திற்கு அழைத்தார். மேலும், தேர்தெதெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் (selected audience)  சங்கரனின் தனி வாசிப்பிற்கு ஏற்பாடு செய்தார்.

திரு. சங்கரன், விவேகானந்தா கல்லுரியில், பொருளியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். 

திரு. சங்கரன் மேலும் பல சாதனைகள் புரிய, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக