ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாரதிதாசன் பாடல்

Friday 8 July 2016
_________________________________________________________________________________

"அச்சமென்பது மடமையடா" என்ற பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர். ரகுமான். கடந்த மாதம் 17ஆம் தேதி இப்படத்திற்கான இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.  பொதுவாகவே ரகுமான் தமிழ் இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைப்பார். இதற்கு முன்னர் பாரதியார் பாடலை "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படத்தில் பயன்படுத்தியிருப்பார். ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பிறகு பாரதிதாசன் வரிகளுக்கு ரகுமான், தன் இசையால் மெருகேற்றியுள்ளார்.  பாரதிதாசனின் கவித்துவமான வரிகள் வரும் முன் ரகுமானின் ரம்மியமான இசை வருகிறது. அதன் பிறகு பாடல், பாடியவர் விஜய் ஏசுதாஸ்.  இவர், அவரது தந்தையின் ஆரம்ப கால  குரலை ஞாபகப்படுத்துகிறார்.  பல்லவி முடிந்தவுடன் திரு.ஆர்.கே. பிரபாகரின் வயலின் இசை (solo bit) சுமார் 40 விநாடிகளுக்கு வருகிறது.  இந்த வயலின் இசை மனதை வருடுகிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.





இதே படத்தில் வரும் இன்னொரு பாடலும் மிக அருமை. பெண் கவிஞர் திருமதி. தாமரை எழுதிய பாடல். பறக்கும் ராசாளியே ராசாளியே என்று இப்பாடல் ஆரம்பிக்கிறது. இப்பாடலில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், பாடலில் ஆங்காங்கே மரபுசார் இசையும் ஒலிக்கிறது. அருணகிரி நாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்ணம் சுப்ரமணிய்யரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப்படிவங்களும் வருகின்றன. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும் போது கிடைக்கும் அனுபவமே அலாதிதான்.  திரு. ஏ.ஆர். ரகுமானின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். இதோ அந்தப் பாடல்

 








































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக