வயலின் விதுஷி ஏ. கன்யாகுமரிக்கு 'சங்கீத கலாநிதி விருது

July 25 2016

                                                வயலின் கலைஞர் ஏ. கன்யாகுமரி

சென்னையில் உள்ள பாரம்பரிய சங்கீத சபாவான மீயுசிக் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் 'சங்கீத கலாநிதி' விருது சங்கீத வித்வானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருது பெறுவதற்கு புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் ஏ. கன்யாகுமரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் பெண் வயலின் கலைஞர் ஆவார்.  இசைத் துறையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஏ. கன்யாகுமரி, மறைந்த திருமதி. எம்.எல். வசந்தகுமாரியின் மாணவியாக 17 ஆண்டுகள் இருந்துள்ளார். ஜி.என். பாலசுப்ரமணியத்திடமும் சில காலம் மாணவியாக இருந்துள்ளார்.  
'சங்கீத கலாநிதி'  விருது பெறும் ஏ.கன்யாகுமரிக்கு வாழ்த்துகள்.

மீயுசிக் அகாடமி அறிவித்துள்ள மற்ற விருதுகள்

   1.   சங்கீத கலா ஆச்சாரிய விருது        :   ருத்ரபட்டி தியாகராஜன் - சாராநாதன்
                                                                               சகோதரர்கள்
                                                                              கர்நாடக இசைக் கலைஞரும்                                                                                                  பேராசிரியருமான
                                                                         திரு.கே. வெங்கடரமணன்  

   2.   டி.டி.கே விருது (TTK Award)               :   1.  பாடகி நிர்மலா சுந்தர்ராஜன்
                                                                         2.  பாடகர் எம். கோடிலிங்கம்

   3.   இசை ஆய்வாளர் விருது                 :    திருமதி. ராம கௌசல்யா

   4.   பாப்பா வெங்கர்ராமய்யா விருது :       சிக்கில் பாஸ்கரன்

பரத நாட்டிய கலைஞர் சாருமதி சருக்கை நாட்டிய கலா ஆச்சாரியா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருது பெறும் மற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
                                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக